தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வயல்வெளியில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வழியாக செல்லும் பயணியர் தங்கள் வாகனங்களை நிறுத்தி பூக்களை ரசிப்பதுடன், அவற்றுக்கு நடுவே நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர். பூந்தோட்ட உரிமையாளர் இதற்கு ஒரு குழுவிற்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கின்றனர். பூக்களை விற்றால் தான் காசு என்பது இல்லை. பூத்து நின்றாலும் காசு தான் போலும்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.