கிழக்காசிய நாடான ஜப்பானின் யோகஹாமாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சட்டவிரோதமாக இயந்திரங்களை ஏற்றுமதி செய்ததாக, 2021ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அந்த நிறுவனத்தின் மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதில், ஷிசுவோ அய்ஷிமா, 72, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஜாமின் மற்றும் உரிய சிகிச்சை கிடைக்காததால், 2022ல், அவர் உயிரிழந்தார். உயிரிழந்ததற்கு யோகஹாமா போலீஸ் உயரதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.