'தலை கவசம் உயிர் கவசம்' போன்ற பல்வேறு வாசகங்களை கடந்து, சாலையில் கவனத்தை ஈர்க்கும் வகையில், மண்டை ஓடு படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலாவது வாகன ஓட்டிகள் 'ஹெல்மெட்' அணிவதன் அவசியத்தை புரிந்து கொள்வர் என, போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைகள் நினைக்கின்றன. ஆனாலும், ஒரு சில வாகன ஓட்டிகள் எதையும் கண்டுகொள்வதாக இல்லை. இடம்: தஞ்சாவூர் பெரிய கோவில் பகுதி மேம்பாலம்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.