ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் அவதார தினமான நேற்று, அவரது 92வது ஜெயந்தி உற்சவம் துவங்கியது. இதில், நகர சங்கீர்த்தனத்துடன் பாதுகா புறப்பாடு நடந்தது. இடம்: அயோத்யா மண்டபம், மேற்கு மாம்பலம்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.