தேச வரைபடத்தில் பலரும் தேடிப்பார்த்த இடம். தமிழகத்தின் துயர வரலாற்று பக்கங்களில் இடம் பெற்ற தடம். குழந்தைகள் உள்ளிட்ட 41 பேரின் நாடித்துடிப்பு அடங்கி ஒடுங்கிப்போன இடம். இந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இடம்: வேலுச்சாமிபுரம், கரூர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்