பீஹார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் கோபுரத்தில், 12 ஆண்டுகளுக்கு முன், 300 கிலோவில் தங்க தகடு ஓட்டும் பணி நடந்தது. அந்த புனித பணியின், 12வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனையில், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த புத்த பிட்சுகளும், பக்தர்களும் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் விருதுநகர் வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.