இதய செயல்பாட்டை கண்டறியும் வகையில், விஐடி சென்னை குழுவினரால் சென்சார் அடிப்படையிலான சிப் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த 'சிப்' பை பஞ்சாப் மாநிலம் மெகாலியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் வழங்கி விஐடி சென்னை குழுவினர் பாராட்டு பெற்றனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.