சட்டவிரோத இருமல் மருந்து தயாரிப்பு தொடர்பாக ஜார்க்கண்ட், குஜராத் உட்பட 5 மாநிலங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் நடந்த சோதனையின் போது பாதுகாப்பில் ஈடுபட்ட வீரர்.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.