சிவகங்கை மாவட்டம் இலுப்பை குடியில், இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற வீரர்களின் நிறைவு விழாவில் சாகச நிகழ்ச்சி நடந்தது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த டியூப் லைட் தடுப்புகளை, மோட்டார் பைக்கில் வேகமாக வந்து தூள் தூளாக்கிய வீரர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.