வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பீஹாரிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. ஒரு சில ரயல்களே இயக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. ரயிலில் ஏற காத்திருந்த பயணியர். இடம்: பாட்னா.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.