ஹைதராபாத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி கோலாட்ட ஊர்வலத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் பங்கேற்று மற்றவர்களுடன் சேர்ந்து ஆடினார். இந்த புனித நாளில், பாரம்பரிய உடைகளில் இருந்த ஹிந்துப் பெண்களுடன் புர்கா அணிந்த முஸ்லிம் பெண் ஆடியது சமூக ஒற்றுமையையும், கலாசாரப் பரிமாற்றத்தையும் பறைசாற்றுவதாக இருந்தது.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.