ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள ஏகம்ரா கானன் பூங்காவில் 'மலர் கண்காட்சி- 2026' கோலாகலமாக துவங்கியது. இதில், ஒடிஷாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், மலர்களால் உருவாக்கப்பட்ட புரி ஜெகன்நாதர் ரத யாத்திரை அலங்காரம், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.