திருநெல்வேலி மாவட்டத்தில் கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம் பக்கம் அமைந்துள்ள கழுவூர் கிராமத்து நீர்நிலைகளுக்கு ஆஸ்திரேலியா, நைஜீரியா,மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வந்த கூழைக்கடா உள்ளீட்ட பறவைகளின் குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் திறனை பெற்றுவிட்ட நிலையில், தங்கள் தாயகம் திரும்ப தயாராகி வருகிறது.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.