ஆர்.இ.சி., முன்னாள் மாணவர்கள் பொன்விழா சந்திப்பு! : திருச்சியில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என பெயர் மாற்றப்பட்ட, அப்போதைய ஆர்.இ.சி., எனும் ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில், 1971 - 76ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் மூன்று நாள் பொன்விழா சந்திப்பு, மாமல்லபுரத்தில் நேற்று நிறைவடைந்தது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கல்லுாரியின் கணிதத் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் கருப்பன் செட்டி, அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவ நிபுணர் பால் பழனியப்பன் ஆகியோருடன் முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.