நம் அண்டை நாடான நேபாளத்தில் மாணவர் போராட்டங்களால் கடந்தாண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வரும்,மார்ச் 5 ம் தேதி பார்லிமென்டுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தீவிர பயிற்சி தற்போது வழங்கப்படுகிறது. இடம்: காத்மாண்டு.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.