சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்ட முடிவு செய்த போது எத்தனையோ போராட்டங்கள், ஒரு வழியாக மரங்களை பாதுகாக்கும் கோரிக்கையே வென்றது. இந்த சாலையை சூழ்ந்த மரங்கள் மனதுக்கு இதமாக காட்சியளிக்கின்றன. இடம்: பொள்ளாச்சி- ஆனைமலை ரோடு.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.