சென்னை மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் நடைபெற்ற அகில இந்திய கிறிஸ்துவ உயர்கல்வி சங்கம் மற்றும் மகளிர் கிறிஸ்துவ கல்லூரி இணைந்து நடத்திய நன்றி முதல்வருக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகளுடன், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்