மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலால் நம் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே பரவி வருகிறது. இதன் காரணமாக, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் பல பகுதிகளில் சிலிண்டர்களை பெற, காஸ் ஏஜென்சிகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.