உத்தரபிரதேச மாநிலம், பிரக்யாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் நீர்வரத்து இல்லாததால் கங்கை நதி வறண்டு காணப்படுகிறது. நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகள் வெளியே தெரிவதால் ஆற்றில் மக்கள் நடந்தே செல்கின்றனர். மார்ச் மாதத்திலேயே திரிவேணி சங்கமத்தின் பெரும்பகுதி வறண்டு காணப்படுவது, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தேரடி வீதியில் உள்ள பழக் கடையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.