திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் வேலுவின் பிரசாரத்தின் போது ஆரத்தி தட்டுகளில் பணம் போடாததால் பெண்கள் சற்று ஏமாற்றத்துடன் நின்றனர். உடனே அவர்களிடம் தேர்தல் ஆணையமும், பத்திரிக்கையாளர்களும் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது முடியாதுங்கம்மா… கொஞ்சம் புரிஞ்சுக்கங்க! என்று கட்சிக்காரர்கள் சொன்னதும் சிரித்துக்கொண்டே கலைந்து சென்றனர்.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.