திண்டுக்கல்லில் வீடு வீடாக சென்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வர போகுது… நல்ல காலம் பிறக்க போகுது...' என குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வந்த திமுக தொண்டர் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு வீட்டின் முன் ஒட்டப்படிருந்த அதிமுக- திமுக ஆதரவு ஸ்டிக்கர்களை பார்த்து திகைத்து போய் நின்றார்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.