வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வஞ்சூரில் உள்ள வஞ்சியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு 30 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
சென்னை மெரினா நொச்சிக்குப்பம் பட்டினப்பாக்கம் சாலையில் நவீன மீன அங்காடி கட்டி கொடுத்தும் லூப் சாலையில் மீன் கடைகள் போடுவதால் அப்பகுதியில் போக்குவரத்தினர் செல் ஏற்படுகிறது.
ரேஷன் கடைகளில் குடும்ப குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் கண், கைவிரல் ரேகை உள்ளிட்ட பதிவு செய்வதற்கான ஈ.கே.ஒய்.சி. சிறப்பு முகாம் நடந்தது. இடம்: சென்னை புதுப்பேட்டை பகுதி
பில்லூர் அணை நீர்மட்டம் 97 அடி எட்டியது.இதை தொடர்ந்து அணையிலிருந்து வினாடிக்கு 8000 கன அடியில் நான்கு கண் மதகுகள் வழியாக தண்ணீர் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சுதந்திர திபெத்தைக் கோரியும், சீனாவின் சட்டத்தை எதிர்த்தும், திபெத்திய சமூக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சென்னையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.இடம் : பெசன்ட் நகர்