திருப்பாலை இஸ்கான் மையம் சார்பில் 12 மணி நேர பகவத் நாம சங்கீர்த்தனம்
ADDED :28 days ago
மதுரை: உலக நன்மை, அமைதி, மனிதர்கள் ஆன்மிக வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மதுரை திருப்பாலை இஸ்கான் மையம் சார்பில் 12 மணி நேர பகவத் நாம சங்கீர்த்தனம் நடந்தது. பஜனை, கீர்த்தனை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நிகழ்வின் ஒரு பகுதியாக ஹரிநாம சங்க ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. ஏற்பாடுகளை இஸ்கான் நிர்வாகிகள் செய்திருந்தனர்.