உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேத நாராயண பெருமாள் கோவிலில் பிரமோற்சவம்; 16 வகை சிறப்பு அபிஷேகம்

வேத நாராயண பெருமாள் கோவிலில் பிரமோற்சவம்; 16 வகை சிறப்பு அபிஷேகம்

 சேத்தியாத்தோப்பு: வேதநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலுார் மாவட்டம், வளையமாதேவி கிராமத்தில் உள்ள கமலவல்லி தாயார் சமேத வேத நாராயண பெருமாள் கோவிலில், கடந்த 22 ம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் ஹோமத்துடன், கொடியேற்றம் நடந்தது. 23 ம் தேதி காலை 7:30 மணிக்குமேல் 9.00 மணிக்குள் துவஜா ரோஹணம், இரவு 8:00 மணியளவில் சிம்ம வாகனம் புறப்பாடு, 24 ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷகமம், இரவு 9:00 மணிக்கு ஹம்ஸ வாகனம் புறப்பாடு, 25 ம் தேதி இரவு 8:00 மணிக்கு கருட சேவை வாகனம் புறப்பாடு; 26 ம் தேதி  இரவு 7:00 மணிக்கு சேஷ வாகனம் புறப்பாடு, 27 ம் தேதி இரவு 9:00 மணிக்கு அனுமந்த வாகனம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து இன்று சூர்ணோற்சவத்தை முன்னிட்டு சாமிக்கு பால், சந்தனம்,பன்னீர் , திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேத நாராயணபெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையுடன் வீதியுலா புறப்பாடு நடந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !