உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாமிரபரணி உயிர் பிழைக்க யார் பரிகாரம் செய்வார்!

தாமிரபரணி உயிர் பிழைக்க யார் பரிகாரம் செய்வார்!

திருநெல்வேலி;  திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் தாமிரபரணிக்கு பவனியாக எடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு. இத்தகைய சிறப்பு மிக்க இங்கு, திருநெல்வேலி ஜங்ஷன் சிந்துபூந்துறையில், திருநெல்வேலியில் பாபநாசம் மட்டுமின்றி ஆற்றின் இருமருங்கிலும் பரிகாரம் என்ற பெயரில் பழைய துணிகள், மண்பாண்டங்கள், மது பாட்டில்கள் வீசப்படுவதால் தாமிரபரணியே உயிர் பிழைக்க அரசு பரிகாரம் தேட வேண்டியுள்ளது.  பரிகாரம் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் வீசப்படும் துணி கழிவுகளால் தாமிரபரணி நீர் மாசடைவது மட்டுமின்றி, உயிரினங்களும் செத்து மடியும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு செய்வதை பக்தர்கள் தவிர்க வேண்டும். தாமிரபரணியை பாதுகாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை அனைத்து பக்தர்களும் உணர வேண்டும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !