விருத்தாசலம் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
ADDED :5 hours ago
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர், கண்டியங்குப்பம் வெண்மலையப்பர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.