உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ஷடசீதி புண்ணிய காலம்; சிவசக்தி வழிபாடு சிறந்த பலனை தரும்!

இன்று ஷடசீதி புண்ணிய காலம்; சிவசக்தி வழிபாடு சிறந்த பலனை தரும்!

சிவபெருமானுக்கு பிடித்தமான மாதம் ஷடசீதி புண்ணிய காலமாகும். ஷடசீதி புண்ணிய காலம் என்பது தமிழ் மாதங்களின் தொடக்கத்தில் வரும் வழிபாட்டு நாளாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களின் முதல் நாளன்று வருகிறது. சிவனை வழிபட மிக சிறந்த நாள் ஷடசீதி புண்ணிய காலமாகும்.  இந்த நாட்களில் சிவன் மற்றும் சக்தியை வழிபடுவது, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்த பலன்களைத் தரும். இன்று இறைவனிடம் வைக்கும் கோரிக்கை யாவும் நிச்சயம் நிறைவேறும். ஷடசீதி என்றால் சமஸ்கிருதத்தில் எண்பத்தாறு (86) என்று பொருள். இந்த புண்ணிய காலத்தில் செய்யப்படும் தான தர்மங்கள் 86 மடங்கு அதிக பலன்களைத் தரும் என்பது ஐதீகம். இன்று வீட்டில விளக்கேற்றி சிவனிடம் வேண்டுவது நிச்சயம் நிறைவேறும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !