உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழபுரம் சிவன் கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்; ஜூன் 27 ல் தேரோட்டம்

சோழபுரம் சிவன் கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்; ஜூன் 27 ல் தேரோட்டம்

சிவகங்கை; சிவகங்கை அருகே சோழபுரம் அறம் வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயிலில் ஆனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் நேற்று காலை 9:15 மணி முதல் 10:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் ஆனி பெருந்திருவிழா துவங்கியது. சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. திருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் தினமும் காலை, இரவில் ரிஷபம், கிளி, பூத, யானை, அன்ன, காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். விழாவின் ஒன்பதாம் நாளான ஜூன் 27 ல் மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான ஜூன் 28 அன்று சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !