வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவில் சேஷ வாகனத்தில் வீதியுலா
வில்லியனுார்: தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி சேஷ வாகனத்தில் வீதியுலா நடந்தது.
வில்லியனுார் பெருந்தேவித் தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலின் 22ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிவுலாவும் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நேற்று முன்தினம் காலை, பல்லக்கில் வேணுகோபாலன் சேவையும், மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வாக, நாளை (27 ம் தேதி) மாலை 6:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், 29ம் தேதி காலை 6 மணிக்கு திருத்தேர் வீதிவுலா, மாலை 6:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தான ராமன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.