திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குரு பூஜை
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குரு பூஜை நடந்தது.
திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில், சுந்தரர் குரு பூஜை விழா இரு நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு சுந்தரர் திருமணக்கோலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், சிவபெருமான் சுந்தரர் தனக்கடிமை என அடிமை சாசனம் காட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 11:00 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு சுந்தரருக்கு குரு பூஜை விழா நடந்தது. பகல் 12.30 மணிக்கு அன்னத்தால் லிங்கம் அமைத்து மகேசுவர பூஜையும், மதியம் 1:00 மணிக்கு அருளாளர் சுந்தரர் அருட்சபையினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் அறிவழகன், கவுதம் குருக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.