சோனையா சுவாமி கோயிலில் பொங்கல் பூஜை விழா; திருமஞ்சனம்
ADDED :3 hours ago
மானாமதுரை: மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சோனையா சுவாமி கோயிலில் தினசரி,வாரச்சந்தை காய்கறி மற்றும் இலை வியாபாரிகள் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனைகள் நடந்தது. மாலை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பூஜை பொருட்களை மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வருகை தந்து பொங்கல் வைத்து சோனையா சுவாமியை வழிபட்டனர் முன்னதாக வாரச்சந்தை வளாகத்திற்குள் மதியம் அன்னதானமும், இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.