உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதமடைந்த ராஜகோபுர மரச்சட்டங்கள் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் அவலம்

சேதமடைந்த ராஜகோபுர மரச்சட்டங்கள் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் அவலம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில், மரச்சட்டங்கள் சீரழிந்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.


ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் உருவாவதற்கு முன்பே, இதே ஊரில் ருத்திரகோடீஸ்வரர் கோவில் உருவானது. இக்கோவிலில் சுயம்புமூர்த்தியாக சிவபெருமான், அம்பாளாக அபிராமி நாயகி அருள்பாலிக்கின்றனர். வேதகிரீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 2021ல் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளே கடந்த நி லையில், ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மரச்சட்டங்கள் சீரழிந்து வருகின்றன. ஐந்து நிலைகளை கொண்ட கோபுரத்தில், ஒவ்வொரு நிலையிலும், மரச்சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாங்குதள மரங்கள் நீண்டகாலம் நிலைக்கும் வகையில், உறுதியானதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள மரங்கள் விரிசலடைந்து, உருக்குலைந்து வருகின்றன. 


இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: கும்பாபிஷேக திருப்பணியின் போது, உறுதியற்ற மரங்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். சில ஆண்டுகளிலேயே மரத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், ராஜகோபுரம் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !