வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி அருள்பாலிப்பு
ADDED :1 days ago
திருப்பூர்;திருப்பூர், ராயபுரம் ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். இன்று வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.