கற்பக விநாயகர் கோவிலில் 15ம் ஆண்டு விழா
ADDED :44 minutes ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி – பாலக்காடு ரோடு சாம்பமூர்த்தி நகர் கற்பக விநாயகர் கோவிலில், 15ம் ஆண்டு விழா நடந்தது.
விழாவையொட்டி, கணபதி பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்தார். ஸ்ரீராம ஜெயம் ஆசிரமம் வாயிலாக அன்னதானம் வழங்கப்பட்டது.
குளித்தலை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.