தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பொக்கிஷம்/அந்தக் காலத்தில்...

அந்தக் காலத்தில்...

அந்தக் காலத்தில்...


PUBLISHED ON : ஜூன் 20, 2026 07:59 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2026 07:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இன்று உலகமே நமது கைபேசிக்குள் சுருங்கிவிட்டது. ஆனால், முந்தைய தலைமுறையினர் பயன்படுத்திய, அன்றாட வாழ்வோடு கலந்திருந்த பல பொருட்கள் இன்றைய தலைமுறைக்குத் தெரியாத அதிசயங்களாக மாறிவிட்டன. அப்படிப்பட்ட பழங்காலப் பொருட்களையும், அவற்றோடு பிணைந்துள்ள நினைவுகளையும் மீட்டெடுக்கும் விதமாக, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 'ஹேப்பி திருவிழா' என்ற பெயரில் ஒரு அரிய பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.Image 1590130இக்கண்காட்சி அரங்குக்குள் நுழைந்தவுடனேயே நாம் ஒரு முப்பது, நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற உணர்வைப் பெற முடிகிறது. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு காலத்தின் சாட்சியாக நின்று பேசுகின்றன.அந்தக்கால ரேடியோக்கள்,ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் ஒரு பெட்டிக்கு முன்னால் அமர வைத்த அந்தக்கால பிரம்மாண்ட மரப்பெட்டி ரேடியோக்களும், ஷட்டர் வசதியுடன் கூடிய கருப்பு-வெள்ளைத் தொலைக்காட்சிகளும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.Image 1590131தொடுதிரை போன்களுக்கு முன்னோடியாக இருந்த, விரல்களை விட்டு சுழற்றிப் பேசும் 'ரோட்டரி' வகை டெலிபோன்களும், தொண்ணூறுகளில் இளைஞர்களின் ஃபேஷனாக இருந்த 'பேஜர்' கருவிகளும் இங்குள்ள இளைய தலைமுறைக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருகின்றன.வீடுகளின் பொருளாதாரத்தை உயர்த்திய, பழங்காலத் தையல் இயந்திரங்களும் அவற்றின் நேர்த்திக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.Image 1590132இந்த 'ஹேப்பி திருவிழா' கண்காட்சியின் மிக முக்கிய ஈர்ப்பாகவும், அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் ஒரு பொருளாகவும் திகழ்வது '40 கிலோ எடையுள்ள ஒரு பிரம்மாண்ட பூட்டு' ஆகும்.அந்தக் காலத்தில் அரண்மனைகள், பெரிய கோட்டைகள் அல்லது பெரும் வணிகர்களின் கருவூலங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட இந்த பூட்டின் வடிவமும், அதன் பாதுகாப்புத் தன்மையும் பார்ப்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. பலரும் இந்த பூட்டின் அருகில் நின்று வியப்புடன் புகைப்படங்களையும், செல்ஃபிக்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.Image 1590133இக்காலக் குழந்தைகளுக்குப் பழங்கால வாழ்வியலைக் கற்றுத்தரவும், பெரியவர்கள் தங்களின் பழைய நினைவுகளை அசைபோடவும் இக்கண்காட்சி ஒரு சிறந்த இடமாகும்.Image 1590135தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், பழமையின் அழகும் அதன் பின்னுள்ள உழைப்பும் என்றும் அழியாதவை என்பதை இந்த 'ஹேப்பி திருவிழா' நமக்கு உணர்த்துகிறது. குடும்பத்தினருடனும், குறிப்பாகக் குழந்தைகளுடனும் சென்று பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான வரலாற்றுப் பயணம் இது!இந்த பழங்கால பொருட்காட்சி நாளை (21/6/2026)ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது இடம்:அரசு அருங்காட்சியகம்,சென்னை,அனுமதி கட்டணம் உண்டு.

படங்கள்:யுவராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us