
டாக்டர்.கே.வீரபத்மன்
கட்டுரையாளர், உளவியல் மற்றும் சமூகசேவை துறை பேராசிரியர். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். திருப்பூர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர். தமிழகத்தில், 11 மாநகராட்சி, 44 நகராட்சி, 21 பேரூராட்சி, 32 கிராம ஊராட்சிகளில் குப்பை மேலாண்மை திட்டம் குறித்து பயிற்சி வழங்கியுள்ளார்.தன் குழுவினருடன் இணைந்து, நெகிழிக்கான மாற்றுப் பொருட்களை மக்களிடையே பிரபலப்படுத்தி வருபவர்.
மாற்றுப் பொருள்
'நெகிழி' பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்பது, மத்திய, மாநில அரசுகளின் அறைகூவல். 'அவற்றின் உற்பத்தியை நிறுத்த வேண்டியது தானே' என பலரும் வாதிடுவர். உணவு பொருள் தயாரிப்பு உள்ளிட்ட சில வகை பொருட்களை 'பேக்கிங்' செய்ய 'பாலித்தீன்' அவசியம். இதை தவிர்க்க முடியாது; மாறாக, அவற்றை மறு சுழற்சிக்கு வழங்கினால், அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும். அவ்வகையில், தமிழகத்தில் 29 மாவட்டங்களில், கலெக்டர்கள் ஏற்பாட்டின் படி, கண்காட்சி நடத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாலித்தீனுக்கு மாற்றுப் பொருள் அறிமுகம் செய்திருக்கிறோம்.
பாறைக்குழியும் 'பார்க்' ஆகும்!
பல இடங்களில் பாறைக்குழியில் குப்பை கொட்டப்படுகின்றன; நிலத்தடி நீர் பாதித்து, சுற்றுச்சூழல் மாசுபடும். இந்த குப்பையில் இருந்து மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, பேட்டல் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும். 'ப்வேட்டல்' என்ற ஆங்கில வார்த்தைக்கு 'விபத்தில் நேரிடும் மரணம்' என்ற சம்பவத்துக்கு இந்த வார்த்தையை பயன்படுத்த கேட்டிருக்கலாம்.
கட்டுப்படுத்த என்ன வழி?
துாய்மைப் பணியாளர்கள், காலை நேரங்களில் மட்டுமே, வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கின்றனர். அதிகாலையிலேயே வேலைக்கு செல்வோரால், குப்பையை, துாய்மை பணியாளர்களிடம் வழங்க முடிவதில்லை. மாலை பணிமுடித்து வீடு திரும்பும் அவர்கள், குப்பையை கால்வாய் உள்ளிட்ட இடங்களில் வீசி விடுகின்றனர். எனவே, மாலையிலும், குப்பை சேகரிக்க வேண்டும்.


