sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூரில் ஆடித் திங்கள் இரண்டாவது வெள்ளி மஹோற்சவ கோலாகலம்

/

சிங்கப்பூரில் ஆடித் திங்கள் இரண்டாவது வெள்ளி மஹோற்சவ கோலாகலம்

சிங்கப்பூரில் ஆடித் திங்கள் இரண்டாவது வெள்ளி மஹோற்சவ கோலாகலம்

சிங்கப்பூரில் ஆடித் திங்கள் இரண்டாவது வெள்ளி மஹோற்சவ கோலாகலம்


ஜூலை 26, 2025

Google News

ஜூலை 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீ அம்மனுக்கு உகந்த ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் ஆலயங்களில் நடைபெறும் உற்சவங்கள் பக்திப் பரவசத்தைப் பெருக்குகின்றன. சுவாமி அலங்காரங்களில் தனித்துவம் பெற்று முத்திரை பதித்து வரும் சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வெவ்வேறு அலங்காரத்தில் ஸ்ரீ அம்பிகை எழுந்தருளி அருள்பாலித்து வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்


ஜூலை 25 ஆம் தேதி ஆலய வசந்த மண்டபத்தில் 1008 செந்தாமரை மலர்கள் எழில்கூட்ட மலர்மலை மேல் ஸ்ரீ அம்பிகை வீற்றிருந்து அருள்பாலித்ததைக் காணக் கண் கோடி வேண்டும். காலையில் அபிஷேகம்- ஆராதனை, அலங்காரம் மெய்சிலிர்க்க வைத்தன. மகா தீபாராதனையின் போது நாதஸ்வர, தவில் ராக சமர்ப்பணமும் தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் உருக்கத்தோடு பாடி விளக்கம் அளித்ததும் மண்டபம் முழுவதும் பக்திப் பிரவாகம் பொங்கித் ததும்பிப் பூரணமாய்ப் பொலியக் காரணமாய் இருந்தன. வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்து வீணாபாணியாய் அருள் பொழியும் சரஸ்வதி தேவியும் சேர்ந்தனரோ என அர்ச்சகரின் தத்துவார்த்த விளக்கம் மிளிர்ந்தது.


மாலையில் சர்வ அலங்காரநாயகியாக ஸ்ரீ அம்பிகை ஆலயம் வலம் வந்தபோது எழுந்த “ ஓம் சக்தி....பராசக்தி “ சரண கோஷம் விண்ணதிர முழங்கிய ஓலி அடங்க நெடுநேரமாயிற்று. வலம் வந்து நிறைவு பெற்ற நிலையில் ஆனந்தத் தாண்டவமாடிய காட்சி பூலோக சொர்க்கமோ என மலைக்க வைத்தது. அர்ச்சகர்களின் அர்ப்பணிப்பும் சுரேஷ் குமார் தலைமையிலான மேலாண்மைக் குழுவினரின் அயரா உழைப்பும் பாராட்டுக்குரியவை. வழக்கம் போல பங்கேற்ற பக்தப் பெருமக்களுக்கு அருட் பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதமும் வழங்கி மகிழ்வூட்டப்பட்டது. அடுத்த வெள்ளிக் கிழமை எத்தகு அலங்காரம் நிகழுமோ என்ற ஏக்கத்தோடு பக்தர்கள் ஆலயம் விட்டுச் சென்றனர்.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us