sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*எந்த மாதம் குலதெய்வ வழிபாட்டுக்கு ஏற்றது?

எம்.பூரணி, பொன்னேரி, திருவள்ளூர்.

முன்னோர்கள் நிர்ணயித்த மாதத்தில் வழிபடுங்கள். தற்போது மகாசிவராத்திரி, பங்குனி உத்திர நாட்களில் குலதெய்வ வழிபாட்டை நடத்துகின்றனர்.

*பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பது ஏன்?

எல்.ஆர்த்தி, பள்ளியாடி, கன்னியாகுமரி.

பார்வதிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்த நாள் பங்குனி உத்திரம். இந்நாளில் விரதமிருந்தால் மணவாழ்வு சிறக்கும்.

*பங்குனி மாதத்தில் அரசுப் பணிக்கு முயற்சித்தால் வெற்றி கிடைக்குமா?

எல்.சாந்தகுமார், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி.

வெற்றி கிடைக்கும். அரசுப்பணியில் சேர, அரசு ஒப்பந்தம் பெற பங்குனி உத்திர நாளில் முயற்சி செய்யுங்கள்.

*செவ்வாய் தோஷம் தீர...

ஆர்.வைதேகி, கல்யாண்புரி, டில்லி.

செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகமும், நவக்கிரக சன்னதியிலுள்ள செவ்வாய்க்கு அர்ச்சனையும் செய்யுங்கள்.

*பங்குனி உத்திரத்திற்கும், முருகனுக்கும் என்ன சம்பந்தம்?

எஸ்.பிருந்தா, ஆழ்வார் திருநகரி, திருநெல்வேலி.

சிவனுடைய நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளாக முருகப்பெருமான் அவதரித்த நாள் பங்குனி உத்திரம்.

*சபரிமலை ஐயப்பன் குத்துக்காலிட்டு இருப்பது ஏன்?

கே.காருண்யா, பட்டிவீரன்பட்டி, தேனி.

முழங்காலைக் கட்டியும், கைகளை நீட்டியும் குத்துக்காலிட்டு அமர்வது 'யோக முத்திரை. இது புலன் அடக்கம், தவத்தின் சிறப்பை உணர்த்துகிறது.

*ஆங்கில மாதத்தில் எட்டாம் தேதியன்று சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

ஆர்.கவிதா, காரைக்குடி, சிவகங்கை.

வெளிநாட்டினர் எட்டாம் தேதியை தவிர்க்கின்றனர். பஞ்சாங்கத்தின்படி நல்ல நாளாக இருந்தால் சுபநிகழ்ச்சியை நடத்தலாம்.

*பிரதோஷத்தன்று நரசிம்மரை வழிபடலாமா?

ஜே.கிஷோர், குன்னுார், நீலகிரி.

வழிபடலாம். அன்று (மாலை 4:30 - 6:00 மணி) நரசிம்மருக்கு விளக்கேற்ற கிரகதோஷம் விலகும்.

*ஸ்ரீமதி, திருமதி, சவுபாக்கியவதி என பெண்களைக் குறிப்பிடுவது ஏன்?

எஸ்.ஆனந்தி, சன்னபட்னா, பெங்களூரு.

பெண்களை கண்ணியத்துடன் பார்க்கிறது ஹிந்து மதம். பெண்கள் சிறப்பாக வாழ மேற்கூறிய அடைமொழிகளை பயன்படுத்துகிறோம்.




    • Dinamalar Events


    Dinamalar