
ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலங்களை 108 திவ்யதேசம் என்பர். கீழ்கண்ட அந்த தலங்கள் ராமாயணத்தோடு தொடர்புடையவை.
* ராமர் அவதரித்த சூரிய குல மன்னர்கள் வழிபாடு செய்த தலம் திருச்சி ஸ்ரீரங்கம்.
* செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை ராமரை, வால்மீகி வழிபாடு செய்துள்ளார்.
* ஜடாயுக்கு அருள் புரிந்த தலம் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி.
* ஜடாயுக்கு முக்தி கொடுத்த பின்னர் ராமர் ஓய்வு எடுத்த இடம் தஞ்சாவூர் மாவட்டம் திருப்புள்ளம் பூதங்குடி.
* கடலின் குறுக்கே பாலம் கட்ட ராமர் தர்ப்பை புல்லின் மீது தவம் செய்த இடம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி.
* ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணபுர ராமரை போற்றியுள்ளார்.
* தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் வட்டத்தில் உள்ள திருவெள்ளியங்குடியில் ராமரே மூலஸ்தான மூர்த்தி.
* தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கவிஸ்தலம் ராமர், அனுமனால் வழிபாடு செய்யப்பட்டவர்.
* மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள திருவழுந்துார் பெருமாளை தரிசித்த பின்னரே ராமாயணம் இயற்ற ஆரம்பித்தார் கம்பர்.
* ராமர் தானம் கொடுத்த பொன்னை கொண்டு ஒரு அந்தணர் கட்டிய திருச்செம்பொன் கோயில் தான் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது.
* திருவள்ளூர் வீரராகவர் கிடந்த கோலத்தில் அருள் செய்கிறார்.
* திருவல்லிக்கேணியில் ராமருக்கு சிறப்பான சன்னதிகள் உள்ளன.

