sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஏப் 06, 2023 09:06 AM

Google News

ADDED : ஏப் 06, 2023 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நமது துக்கங்களை எல்லாம் கடக்க வைக்கக்கூடியது ராம நாமம். அதை 'தாரக நாமம்' என்று சொல்வர்.

* தசரதர் தனக்கு குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தார். அவரது நினைவிற்கு வந்த பெயரே ராமர். இதற்கு துன்பங்களை நீக்கி ஆனந்தத்தை கொடுப்பவர் என்று பொருள்.

* ராம நாமம் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் வேத உபநிஷத்தில் உள்ளது.

* ராமபிரான் இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டி கடலைக் கடந்தார். ஆனால் ராம நாமம் சொன்ன, அனுமனோ விண்ணில் தாவி கடலைக் கடந்தார்.

* எல்லா சகஸ்ரநாமங்களுக்கும் ஆதியானது விஷ்ணு சகஸ்ரநாமம். அப்படிப்பட்ட நாமாவளியை சொன்ன பலன், மூன்று முறை ராம நாமத்தை ஜபித்தாலே கிடைத்துவிடும்.

* காசியில் இறக்கும் ஜீவன்களுக்கு, 'ராம ராம ராம' என்ற நாமத்தை உபதேசித்து முக்தி அளிப்பார் சிவபெருமான்.

* அழிவில்லாத ஸ்வரூபமான ராமபிரானையும், அவன் நாமாவையும் சொல்லி அழிவில்லாத ஆனந்தத்தை அடைவோம் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

* ராம நாமம் மட்டுமே எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மூல மந்திரமாகும் என சொல்கிறார் கம்பர்.






      Dinamalar
      Follow us