
* ஒன்றை ஆக்குவதும், அழிப்பதும் உன் கையில் தான் உள்ளது.
* திறமையான நபர்களிடம் பணியாளராக இருந்தாவது தொழிலை கற்றுக்கொள்.
* அறியாமை என்பது விஷப்பூச்சி. அது மனதில் புகுந்து விட்டால் மகிழ்ச்சி இருக்காது.
* அகங்காரம் என்னும் அசுரனிடம் சிக்கி விட்டால், துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.
* இக்கட்டான சூழலில் கட்டுப்பாடு எனும் கடிவாளத்தால் மனதை இழுத்துப் பிடி.
* பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான், சில உண்மைகள் புரியவரும்.
* அதர்மம் இருந்தால் தான் தர்மத்தின் அருமை புரியும்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே உண்மையில் கண்ணுடையவன்.
* ஒரு செயலை தொடங்குவதற்கு முன், அதன் பயனை இன்னதென்று தெரிந்து கொள்.
* பிறர் பொருளை அபகரிக்க வேண்டும் என மனதாலும் நினைக்காதே.
* நல்லவருடன் பழகு. நல்ல பண்புகளை கற்றுக்கொள்வாய்.
* ஆசையினால் ஒருவன் குற்றம் செய்கிறான். அதை தவிர்க்க மனவலிமை, விடாமுயற்சி தேவை.
* தைரியம் என்பதற்கு துணிவு மட்டுமல்ல, அறிவு என்ற பொருளும் உண்டு.
* மனஉறுதியுடன் ஒரு வேலையை செய். அதில் வெற்றி பெறுவாய்.
* எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு. எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு.
என்கிறார் பாரதியார்

