
* சிரித்த முகத்துடன் பழகு. மகிழ்ச்சி பொங்கும்.
* உனது வாழ்க்கை குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன் தர வேண்டும்.
* பெற்றோரை விட சிறந்தவர் இவ்வுலகில் யாருமில்லை.
* அன்பு, அறிவு என இரண்டும் அவை வெளிப்படும்போது மட்டுமே உணர முடியும்.
* பெரியவர்களை பார்த்தால் வணங்கு. முடியாவிட்டால் அவர்களை அலட்சியப்படுத்தாதே.
* ஞானிகளைப் பழித்தவன் மறுபிறப்பில் பித்தனாகப் பிறப்பான்.
* இந்த பிறவியில் செய்யும் நன்மைகளை மறுபிறப்பில் அனுபவிப்பாய்.
* யார் கைவிட்டாலும், நீ செய்த தர்மம் உன்னைக் கைவிடாது.
* பயிருக்கு முள் வேலியைப் போல், பணத்திற்கு தர்மம் வேலியாக இருக்கட்டும்.
* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதே.
* புத்தகத்தால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.
* எந்தப் பணியிலும் நிதானத்துடன் ஈடுபடு. வெற்றி பெறுவாய்.
* நல்ல எண்ணங்கள் இருக்கும் மனமே கடவுளின் கோயில்.
* கடவுளை அன்பினால் வணங்கு. அவரிடம் வியாபாரம் செய்யாதே.
* மானம் காக்க ஆடையும், மனதைக் காக்க வழிபாடும் அவசியம்.
சொல்கிறார் வாரியார்

