ADDED : ஆக 21, 2023 03:11 PM

* சூரியன் உதயமாவதற்கு முன் எழுந்தால், உனக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.
* விநாயகரை வணங்கு. நல்ல மனமும் லட்சுமியின் கடாட்சமும் உண்டாகும்.
* உயிர் பிரியும் போது பணம் உன்னுடன் வராது. எனவே பணத்தை வைத்து தர்மம் செய்.
* பிறருக்கு செய்த சிறு உதவி கூட, நிச்சயம் ஒரு நாள் உனக்கு பலன் தரும்.
* இளமையில் வறுமையும், முதுமையில் செல்வமும் பெற்றால் துன்பமே மிஞ்சும்.
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் உன்னிடம் சேராது.
* வெறும் பானையை அடுப்பில் வைத்தால் பொங்குமா. அதுபோல் நல்லது செய்யாமல் கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன்.
* 'சிவாய நம' என்று தினமும் சொல். இந்த ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் வழியாகும்.
* நீ என்னதான் முயன்றாலும் தகுந்த காலம் கூடினால் மட்டுமே, உன் செயலுக்கு பலன் கிடைக்கும்.
* முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கு ஏற்பவே, தற்போது உன்னிடம் செல்வம் உள்ளது.
* நல்ல குணமுள்ள மனைவி அமைந்து விட்டால் உனக்கு வேற எதுவும் தேவையில்லை.
* நீ செய்த புண்ணியத்தின் படியே முயற்சியில் வெற்றி பெறுவாய்.
* பிறருக்கு கிடைக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தாதே.
* சாப்பிட நாழி அரிசி சோறும், உடுக்க நான்கு முழமும் போதும். ஆனால் நாம் ஆசைப்படுவதோ கோடி விஷயம்.
என்கிறார் அவ்வையார்

