நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசோக சக்கரத்தின் கீழ் 'சத்யமேவ ஜயதே' என எழுதப்பட்டிருக்கும். 'வாய்மையே வெல்லும்' என்பது இதன் பொருள். இது சரியான சொற்றொடரா என்று கேட்டால் இல்லை. 'சத்யமேவ ஜயதி' என்பதே சரியான சொல். வார்த்தைகளின் இனிமைக்காக சொல்லை மாற்றும் உரிமை வேதகாலத்தில் ரிஷிகளுக்கு இருந்தது. இந்த முறையை 'ஆர்ஷப் பிரயோகம்' என்பர். இம்முறையை ரிஷிகள் மட்டுமே பயன்படுத்தலாம். ரிஷிகளின் வாக்கு என்பதால் 'சத்யமேவ ஜயதே' என நாம் அப்படியே உச்சரிக்கிறோம்.