
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உன்னை நீயே உலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. நீ செய்யும் தர்மமே உன்னை ஊருக்கு காட்டி விடும்.
* உண்மையான பக்தன் என்பவன் பொறுப்பற்றவனாக இருக்க மாட்டான்.
* அனைத்தும் ஆண்டவனுக்கு உரியது என்பதை உணர்ந்தவனிடம் கவலை நெருங்குவது இல்லை.
* தூய்மையைத் தேடி அலைய வேண்டாம். முதலில் மனதைத் தூய்மைப்படுத்த முயற்சி செய்.
* நோய் நெருங்காமல் பார்த்துக் கொள். ஆரோக்கியம் ஆனந்தமான வாழ்வுக்கு துணை செய்யும்.
- சாந்தானந்தர்