திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி
ADDED : 8 hours ago
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை அஞ்சலி. தற்போது நடிகர் விஷால் இயக்கி நடித்து வரும் 'மகுடம்' படத்தில் நடித்து வருகிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நேற்று சென்று வழிபாடு நடத்தியுள்ளார் அஞ்சலி. கோயிலில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “கிரிவலம், திருவண்ணாமலை, ஆசி, தெய்வீகம், அன்பு” எனப் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு மக்களிடையே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கடந்த சில வருடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் திருப்பதி செல்வது போல தெலுங்கு மக்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
கிரிவலம் செல்லும் நாட்களில் கூட்டம் கூடுதலாகிக் கொண்டே போகிறது. இப்படி சினிமா பிரபலங்களும் அடிக்கடி வருவதால் அங்கு இன்னும் அதிகமான பக்தர்களை வரவழைத்து வருகிறது.