தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவியின் 158வது படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. 'வால்டர் வீரய்யா' படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி, இயக்குனர் பாபி கொல்லி மீண்டும் இணையும் படம் இது.
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இன்று நடைபெற்ற பூஜையில் சிரஞ்சீவியின் தம்பியும், ஆந்திர மாநில துணை முதல்வரான பவன் கல்யாண் கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து சீரஞ்சிவி, “இன்று கல்யாண் பாபுவிற்கும் எனக்கும் இடையில் அந்த 'கிளாப்போர்டு' வைக்கப்பட்டதை நான் காணும்போது...
30 ஆண்டுகளுக்கு முன்பு, இதே காட்சி தலைகீழாக அரங்கேறிய ஒரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வருகிறது — அது 'தொலி பிரேமா' (முதலில் 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி' எனப் பெயரிடப்பட்டிருந்தது) திரைப்படத்தின் உருவாக்கப் பணியின்போது நிகழ்ந்தது.
துணை முதலமைச்சர் அவர்களே, தங்களின் இன்றைய பரபரப்பான பணி அட்டவணையிலிருந்து நேரம் ஒதுக்கி, எனது 158-வது திரைப்படத்தின் முகூர்த்த விழாவில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. அந்த 'கிளாப்போர்டை' ஒலித்ததன் மூலம், இத்திரைப்படக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தாங்கள் அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.