காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
ADDED : 7 hours ago
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் சமீபத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படை அழைப்பின் பேரில், காஷ்மீரில் இருக்கும் எல்லை பகுதிக்கு சென்றார். அங்கு ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தியவர் அதன் பிறகு அங்குள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, குரேஸ் பள்ளத்தாக்கின் நெரோ துலைல் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள அரசு பள்ளி ஒன்றை பார்வையிட்ட அவர் அடிப்படை வசதி கூட இல்லாத அந்த பள்ளியை கண்டு கண் கலங்கினார். அந்தப் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அங்கேயே அறிவித்தார்.
அதன்படி அவர் அளித்த நிதியை கொண்டு, அந்த பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கின்றனர். புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடத்திற்கு அக்ஷய் குமாரின் தந்தை ஹரி ஓம் பாட்டியாவின் நினைவாக, 'ஹரி ஓம் பாட்டியா கல்வி வளாகம்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.