உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த 'பாலன் ; தி பாய்'

ஓடிடியில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த 'பாலன் ; தி பாய்'

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது இயக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 'பாலன் தி பாய்' என்கிற படம் வெளியானது. முந்தைய படத்தைப் போல வசூல் ரீதியாக வெற்றியைப் பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 31ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள இப்படம், தற்போது வரை 100 மில்லியன் நிமிடங்களுக்கும் மேல் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. தாய் மகன் பாசத்தை மையப்படுத்தியும், அதே சமயம் இவர்கள் இருவருக்கு இடையே நிலவும் மர்மத்தையும் இப்படம் சொல்லியிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !