Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பழமொழி/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி 24, 1961


கோவையில், கந்தசாமி முதலியார் - வடிவம்மையார் தம்பதியின் மகனாக, 1878, பிப்ரவரி 20ல் பிறந்தவர் சுப்பிரமணிய முதலியார்.

இவர், கோவை அரசு உயர்நிலைப் பள்ளி, கலைக் கல்லுாரியில் படித்தார். சிவஞான முனிவரிடம் படித்த சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த திருச்சிற்றம்பல பிள்ளையிடம், தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றார்.

சென்னை, மாநிலக்கல்லுாரியில் பி.ஏ., படித்து, 'பிராங்க்ளின்' தங்கப்பதக்கத்தை பெற்றார். மொழிபெயர்ப்பு, செய்யுள், கட்டுரைகளை எழுதுவதில் வல்லவரான இவர், சட்டம் படித்து, கோவில்கள் பற்றிய வழக்குகளில் வெற்றி பெற்றார். வ.உ.சி., நீலகண்ட பிரம்மச்சாரி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கினார்.

இவரின் உதவியை மறவாத வ.உ.சி., தன் மகனுக்கு இவரது பெயரையும், தன் மகளுக்கு இவர் மனைவி மீனாட்சியின் பெயரையும் சூட்டினார். இவர், பெரியபுராணம் உள்ளிட்ட பக்தி நுால்களுக்கு உரை எழுதினார். கோவை நகரசபை உறுப்பினர், சென்னை பல்கலை தமிழ்மொழி ஆணையர் பொறுப்புகளை வகித்துள்ள இவர், தன் 82வது வயதில், 1961ல் இதே நாளில் மறைந்தார்.

சைவத்தமிழ் வளர்த்த, 'சிவகவிமணி' மறைந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap